Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 09 மில்லியன் மக்களுக்கு செலுத்தும் வகையில் 18 மில்லியன் டோஸ் தடுப்பூசி இலங்கைக்கு வருகிறது!

09 மில்லியன் மக்களுக்கு செலுத்தும் வகையில் 18 மில்லியன் டோஸ் தடுப்பூசி இலங்கைக்கு வருகிறது!

1 minutes read

09 மில்லியன் மக்களுக்கு செலுத்தும் வகையில் 18 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி அரசாங்கத்தால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கோவக்ஸ் திட்டத்தின் மூலம் முதல் தொகுதி தடுப்பூசிகள் பெப்ரவரி இறுதிக்குள் இலங்கையை வந்தடையும் என பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மார்ச் முதலாம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் 4,000 மத்திய நிலையங்களில் தடுப்பூசியை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், 30 தொடக்கம் 60 வயதுக்கிடைப்பட்ட தொழில் செய்யும் அனைத்து பிரஜைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அந்தவகையில் நாடு முழுவதும் அமைக்கப்படும் ஒவ்வொரு தடுப்பூசி மத்திய நிலையம் ஊடக தினமும் 300 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More