Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 370ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 370ஆக அதிகரிப்பு

2 minutes read

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கபுலியத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கொவிட் 19 நிமோனியா நிலை, நுரையீரல் அழற்சி நோய் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவர், கொத்தலாவலை பாதுகாப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியாவினால் சிறு நீரகம் செயலிழந்தமை மற்றும் குருதி விசமானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெடவளை பகுதியை சேர்ந்த 56 வயதான ஆண் ஒருவருக்கு கண்டி பொது வைத்தியசாலையில் கொவிட் 19 இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 2ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட் 19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் பகுதியை சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவர் நாரம்மல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கொவிட் 19 நிமோனியா நிலைமை மற்றும் மூச்சிழுப்பு என்பன அவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 6ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார்.

கொவிட் 19 நிமோனியா, மோசமடைந்த நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் என்பன அவரது மரணத்திற்கான காரணம் ன தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 370 ஆக உயர்வடைந்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More