பிரபாகரன் ஹீரோ இல்லை. அவர் மண்டேலாவும் இல்லை. பயங்கரவாதி, கொலைகாரன், கொள்ளையன் என்று ஆளும் கட்சி எம்.பி பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
நேற்று (9) நாடாளுமன்றில் உரையாற்றும் போது இதனை இதனை தெரிவித்தார்.
விடுதலை புலிகள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி சுதந்திர இயக்கம் என்று கூறியதாக குற்றஞ்சாட்டியதுடன், புலிகளின் தலைவர் பிரபாகரனை ஹீரோ என்றும் கஜேந்திரகுமார் கூறுகியதாகம் சீற்றமடைந்த நிலையில் பிரமித கருத்து வெளியிட்டார்.
இதன்படி பிரபாகரன் ஹீரோ இல்லை. அவர் யாரென நினைவூட்டுகிறேன். அவர் மண்டேலா இல்லை. அவர் மகாத்மாகாந்தி இல்லை. அவர் மார்டின் லூதர் கிங் இல்லை. இலகுவான ஆங்கிலத்தில் கூறுகிறேன் இந்த வார்த்தைகளை டிக்சனரியில் பாருங்கள், அவர் ஒரு பயங்கரவாதி, அவர் கொலைகாரன், அவர் பொறுக்கி (Hooligan), அவர் கொள்ளையன் (Thug) என்றும் பிரமித தனது கடுப்பை கொட்டித்தீர்த்தார்.