Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஒரு இலட்சத்து 89 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

ஒரு இலட்சத்து 89 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

1 minutes read

இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 89 ஆயிரத்து 349 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 29ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் நேற்றைய தினம் மாத்திரம் 2 ஆயிரத்து 695 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்ட கடந்த 29ஆம் திகதி முதல் கடந்த 4ஆம் திகதி வரையில் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 327 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

எவ்வாறாயினும் கடந்த 5ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 9 ஆயிரத்து 983 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More