Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எதிர்வரும் 20ம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு!

எதிர்வரும் 20ம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு!

1 minutes read


கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் கிளிநொச்சி ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கம்புாதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு விலந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து 20ம் திகதி 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் குறித்த தினத்தன்று தீச்சட்டி போராட்டமாக முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று அழைப்பு விடுத்துள்ளனர்.

குறித்த சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி மேலும் தெரிவிக்கையில்,
உண்மைக்கு நீதிக்குமான குறித்த போராட்டம் சர்வதேசத்தின் ஊடாக நீதியை பெற்றுக்கொள்வதற்காக குறித்த தொடர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தோம். எங்களுடைய உறவுகள் எமக்கு கிடைக்கும்வரையும், அவர்களிற்கான நீதி கிடைக்கும்வரையிலும் குறித்த போராட்டத்தை கைவிடப்புாவதில்லை.

வருகின்ற 20ம் திகதி வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளும் எமக்கு பலம் சேர்க்க வேண்டும். அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், போக்குவரத்து கழகங்கள், அரசியல் பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் அன்றைய தினம் நடைபெறவுள்ள தீச்சட்டி பேரணியில் கலந்துகொண்டு எங்களிற்கான நீதி கிடைக்க வலு சேர்க்குமாறும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த தீச்சட்டி பேரணியானது கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலினை சென்றடையும். இந்த போராட்மானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இடம்பெறவுள்ள நிலையில் எமக்ககான நீதியை சர்வதேசம் பெற்று தருவதற்காக சர்வதேசத்தில் உள்ள அனைவரினது நெஞ்சங்களிலும் பதியப்பட வேண்டும்.

எமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தவர்களும், எமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்ற அனைவரும் 20ம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பேரணியில் கலந்து கொண்டு எமக்கு வலுச் சேர்க்க வேண்டும் என அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More