0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு, ஆளும் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்து இதன்போது, முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.