Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு!

1 minutes read

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 459 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர், நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்தமையை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதாவது, கடவத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவரும், வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 93 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் மேலும் 447 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 76 ஆயிரத்து 961 ஆகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 81ஆயிரத்து 467 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில், இன்னும் நான்காயிரத்து 47பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More