மாந்தை கிழக்கு மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் பேருந்துகளிள் மாற்றுத்திறனாளிகளிற்கான ஆசண அடையாளமிடும் வேலைத்திட்டம் நேற்று கிளிநொச்சயில் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி பேருந்து நிலையம், முறிகண்டி மற்றும், பரந்தன் பேருந்து தரிப்பிட நிலையம் ஆகிய பகுதிகளில் குறித்த வேலைத்திட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது,
வேர்ள்ட் விசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த வேலைத்திட்டமானது பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றகனர்.
மாற்று திறனாளிகளிற்கான ஆசண ஒதுக்கீடு தொடர்பில் மொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை. இவ்வாறான நிலையில் ஆசன ஒதுக்கீட்டு பகுதியில் நேற்றைய தினம் அடையாளப்படுத்தும் வகையிலான ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.