புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும், வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் செவிப்புலன் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர் சந்ரா ஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
காதுகளில் படியும் கழிவுகளை வெளியேற்றுவதற்காக காது துடைப்பான், வாகன திறப்பான், சட்டை பின், போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
இதன் காரணமாக செவியினுள் காயங்கள் ஏற்படுவதுடன் நாளடைவில் செவிப்புலன் பிரச்சினை ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளையும் செவிப்புலன் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.