Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தாயும் மூன்று குழந்தைகளும் கிணற்றில் குதித்து, குழந்தைகள் மரணம் | உயிர் தப்பிய தாய் | கிளிநொச்சியில் பெரும் சோகம்!

தாயும் மூன்று குழந்தைகளும் கிணற்றில் குதித்து, குழந்தைகள் மரணம் | உயிர் தப்பிய தாய் | கிளிநொச்சியில் பெரும் சோகம்!

1 minutes read

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளுடன் தாயொருவர் கிணற்றுக்குள் குதித்த சம்பவத்தில் காணாமல்போன இரு குழந்தைகளின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்றுப் பிற்பகல் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி பகுதியில் பெண் ஒருவர் தனது 3 பிள்ளைகளைகளுடன் கிணற்றில் தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் அவர் உயிருடன் மீட்கப்பட்டு, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது ஒரு குழந்தையின் சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில், மற்றும் 5 வயது மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகள் தொடர்பில் பொலிசாரும், கிராம மக்களும் இணைந்து தேடுதல் மேற்கொண்டு வந்தனர்.

இதன்போது குறித்த இரு குழந்தைகளும் கிணற்றில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நீதவான் பார்வையிட்டதன் பின்னர் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More