0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபரை பொலிஸார் அரலகங்வில பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
78 வயதுடைய முதியவர் ஒருவரே குறித்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர் ஆவார்.
இதன்போது அவர் திருடிய 17 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளில் அவர் திருடிய பல மோட்டார் சைக்கிள்களை ஏனையவர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.