தேசிய அடையாள அட்டை தரவுகளை இணையம் ஊடாக உறுதிப்படுத்தும் விசேட திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்கள் நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் ஆகியவற்றின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு குறித்த செயற்திட்டம் பயனுள்ளதாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் இணக்கப்பாட்டுடன் மாத்திரமே குறித்த சேவையினை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை தனிநபர் ஒருவரின் தரவுகளை உறுதிப்படுத்துவதற்கு குறித்த நடவடிக்கை பயனுள்ளதாக அமையும் எனவும் ஆட்பதிவு திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.