கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்த சடலம் தொடர்பான DNA பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த சடலம் குருவிட்டை, தெப்பனாவ பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுடையதென DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த பெண்ணின் வெட்டப்பட்ட தலையை தேடி தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.