இலங்கையில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆணொருவர் பொல்கஸ்ஓவிட்ட பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண்ணொருர் மற்றும் ஆண்டிகம பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவரும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 88 ஆயிரது 862 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 338 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொற்று உறுதியானோரில் மேலும் 354 பேர் குணமடைந்து நேற்று வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 725 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 600 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.