உணர்வரிய மெய் ஞானியாக விளங்கிய பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் ஐயா ,எங்கள் புலமை மரபின் உன்னதம்.தமிழியல், ,சைவ சித்தாந்த மெய்யியல், இதழியல் என பன்முகத்தடங்களில் முத்திரை பதித்தவர்.பண்பாட்டு உணர்திறனொடு சமூகப்பணிகளில் அயராது உழைத்தவர்.அவரோடு பழகக் கிடைத்த பொழுதுகளின் மேன்மையினை உரைத்திட வார்த்தையில்லை. ஈடுசெய்ய முடியாத பண்பாட்டு இழப்பினில் தவிக்கும் உறவுகளோடு அவர் மேலான நினைவுகளைக் காக்கும் உறுதியுடன் பிரார்த்தனை செய்வோம்.
பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன்
மேனாள் துணைவேந்தர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்