Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கடலில் மிதந்து வந்த போத்தல் பானத்தை மது என நினைத்து பருகியவர் பரிதாபமாக பலி!

கடலில் மிதந்து வந்த போத்தல் பானத்தை மது என நினைத்து பருகியவர் பரிதாபமாக பலி!

1 minutes read

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் மிதந்து கரையொதுங்கிய மதுபானம் என நம்பப்படும் ஒருவகைப் பானத்தை அருந்திய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த போத்தல் கரையொதுங்கியதாகவும் அதனை எடுத்து 20 வரையானோர் பருகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தினை அடுத்து உடல் நிலை பாதிப்பினை எதிர்கொண்ட ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தையா ஸ்ரீகுமார் (46) என்று தெரியவந்துள்ளது.

சடலம் ஆதாரவைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து சிலர் தாமாகவே வைத்தியசாலைக்குச் சென்று தம்மை பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும் குறித்த போத்தலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More