கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு பின்னரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் இன்று முதல் முறையாக மக்கள் பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதுபோன்ற நிகழ்வுகளில் ஈடுபடும்போது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை அணிய வேண்டும், என்றும் அதேநேரத்தில் பொது இடங்களில் சமூக விலகலையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிறுத்தினார்.
மேலும் சிறப்பு நிகழ்வுகளை நடத்துவதற்கு பொலஜஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளிடமிருந்து முன் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வுகளின் சுகாதார வழிகாட்டுதல்களை அமுல்படுத்த வேண்டும் என்பதுடன், பங்கேற்பாளர்கள் அதை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.