Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மேலும் சில பகுதிகள் முடக்கம்!

இலங்கையில் மேலும் சில பகுதிகள் முடக்கம்!

1 minutes read

கொரோனா வைரஸ் தொற்று விரைவாக அதிகரித்து வருகின்றமையினால் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் பகுதிகளை உடனடியாக முடக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் கொழும்பு- பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாம்பமுனுவ, கொரக்காபிட்டி கிராம சேவகர் பிரிவுகள் தற்போது முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை காலி- அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடஹேன, தல்கஸ்கொட கிராம சேவகர் பிரிவுகள் இன்று முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் அம்பாறை- தெய்யத்தகண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெய்யத்தகண்டி மற்றும் கதிராபுற கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

இதனிடையே இரத்தினபுரி- கலவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புகொட கிராம சேவகர் பிரிவும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More