அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரங்களுக்கும் வர்த்தக நிலையங்களுக்கும் செல்லும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் அதற்கான வசதிகளை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம் என்றும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வர்த்தகநிலையங்களுக்கும் சூப்பர் மார்க்கெட்டு களுக்கும் செல்லும் மக்கள் இதற்கு முன்னர் கடைப்பிடித்த வழக்கமான முறைமையை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அத்துடன் வர்த்தக நிலையங்களிலோ அல்லது சூப்பர் மார்க்கெட்டுகளிலோ நீண்ட நேரம் தரித்திருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.