Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சினோபார்ம் தடுப்பூசி இன்றிலிருந்தே நாட்டு மக்களுக்கு வழங்கும் திட்டம் ஆரம்பம்!

சினோபார்ம் தடுப்பூசி இன்றிலிருந்தே நாட்டு மக்களுக்கு வழங்கும் திட்டம் ஆரம்பம்!

1 minutes read

சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் (Sinopharm) கொரோனா தடுப்பூசித் திட்டம் இலங்கையில் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதன்படி, பானந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிமுதல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சீனா அரசாங்கத்தால் ஆறு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு இலவசமாக நட்பு ரீதியாக வழங்கப்பட்டது. அதில் ஒரு பகுதி நாட்டில் வசிக்கும் சீனர்களுக்குச் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு நேற்று அங்கீகாரம் வழங்கிய நிலையில், இலங்கையில் குறித்த தடுப்பூசித் திட்டம் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது.

இதேவேளை, அடுத்தவாரமளவில் தடுப்பூசித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More