Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

1 minutes read

இதன்படி கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் நுகேகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒபேசேகரபுர (514சீ) கிராம சேவகர் பிரிவும் இரத்தினபுரி மாவட்டத்தில் கிரியெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுவாகல தோட்டத்தின் மேற்பிரிவும் கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெந்தளை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த கிராமமும் நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல தோட்டத்தின் கீழ் பிரிவும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டன.

இதேவேளை மாத்தளை- மஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெமதஓய கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கம்பஹா- பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டிஹேன கிராம சேவகர் பிரிவின் லேக்வீவ் வீதி, பொல்ஹேன வீதி, முதலீட்டு சபை வீதி, தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மேலும் மீகஹவத்த பொலிஸ்பிரிவுக்குட்பட்ட சியாம்பலாபே கிராம சேவகர் பிரிவின் ஆரியதாச விதானகே மாவத்தையின் முடிவிடம், ஆரியதாச விதானகே மாவத்தை, தேவாலய வீதி, சியம்பலாபேவத்த கந்துபொட வீதி ஆகிய பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More