Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டில் புதிதாக ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா!

நாட்டில் புதிதாக ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா!

1 minutes read

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 38 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, 17 பெண்களும் 21 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 351 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 68 ஆயிரத்து 676ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 2 இலட்சத்து 38 ஆயிரத்து 131 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 27 ஆயிரத்து 194 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More