Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

1 minutes read

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரகல கிராம சேவகர் பிரிவு உடனமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 6 மணிமுதல் பரகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் தெமட்டகொட ஆராமய பகுதியின் 66ஆம் தோட்டம் மற்றும் மேலும் 2 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More