கொரோனா வைரஸின் மாறுபாடாக டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளில் உலக நாடுகள் முழுவதும் போராடி வருகின்ற இச் சந்தர்ப்பத்தில் டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் ஏற்படலாமென உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் கேப்ரியேசஸ் மேற்படி தகவலை தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாட்டை விட அதிக பரவல் கொண்டதும், ஆபத்து நிறைந்ததுமான மற்றுமொரு மாறுபாட்டை மனிதகுலம் விரைவில் பார்க்கக்கூடும் எனவும், கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் கண்டுபிடிப்பு மற்றும் உலகம் முழுவதும் அதன் பயன்பாடுகள் மட்டுமின்றி, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் உலகம் மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உள்ளதௌவும் தெரிவித்துள்ளார்.
அதில் முக்கியமான காரணியாக, அனைவருக்கும் சமமான அளவுக்கு தடுப்பூசி கிடைக்காமையே எனவும் தெரிவித்துள்ளார்.