Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கு 30 கோடி ரூபா பெறுமதியான பரிசோதனை உபகரணங்கள்!

இலங்கைக்கு 30 கோடி ரூபா பெறுமதியான பரிசோதனை உபகரணங்கள்!

1 minutes read

கொரோனா வைரஸ் தொற்றை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில் உபயோகப்படுத்தும் 05 லட்சம் பரிசோதனை உபகரணங்கள் (Rapid Diagnostic) நேற்றைய தினம் அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

30 கோடி ரூபா பெறுமதியான இப்பரிசோதனை உபகரணங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி நிறுவனமான சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நிறுவனமான USAID நிறுவனம் மூலம் சுகாதாரஅமைச்சுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இவ் உபகரண தொகை நேற்று சுகாதார அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த 16ஆம் திகதி அமெரிக்க மக்களால் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட 15 மில்லியன் மொடர்னா தடுப்பூசிக்கு மேலதிகமாக இவ் உபகரணங்கள் நேற்று இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்தது.

கடந்த வருடம் நாட்டில் கொரோனா வைரஸ் சூழ்நிலை ஆரம்பமான காலம் முதல் அமெரிக்க அரசாங்கமானது 8 மில்லியன் டொலருக்கும் அதிக பெறுமதியான அவசர தேவைகளுக்கு உபயோகிக்கும் உபகரணங்கள் 200 வெண்டிலேட்டர் உபகரணங்கள், 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் ஆகியவற்றை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More