Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் ஒரே நாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

இலங்கையில் ஒரே நாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

1 minutes read

அதன்படி நேற்றைய தினம் 5 இலட்சத்து 15 ஆயிரத்து 830 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அதன்படி, நேற்று மாத்திரம் 4 இலட்சத்து 18 ஆயிரத்து 494 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை 71 இலட்சத்து 88 ஆயிரத்து 692 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம், 56 ஆயிரத்து 738 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று செலுத்தப்பட்டது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், 16 இலட்சத்து 63 ஆயிரத்து 421 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம், 2 ஆயிரத்து 168 பேருக்கு மொடெர்னா தடுப்பூசியும் நேற்று செலுத்தப்பட்டது.

இதற்கமைய, இதுவரையில் 7 இலட்சத்து 11 ஆயிரத்து 793 பேருக்கு மொடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் நேற்றைய தினம் 38 ஆயிரத்து 430 பேருக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, அந்த தடுப்பூசியினை செலுத்திக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More