Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சுசில் விடயத்துடன் அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பம்!

சுசில் விடயத்துடன் அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பம்!

1 minutes read

மக்களுக்காக பேசிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை பதவியில் இருந்து நீக்கியது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான ஆரம்பம் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் புஸ்ஸல்லாவ பிரதேச தோட்ட தலைவர்களுக்கான சந்திப்பு ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) புஸ்ஸல்லாவ மலையக மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமசந்திர இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளில் சிரேஷ்ட அரசியல்வாதியும் சட்டதரணியுமாவார்.

இலங்கையில் பல அமைச்சு பதவிகளையும் சில அரசியல் கூட்டணி கட்சிகளின் செயலாளராகவும் இருந்துள்ளார். நல்ல அரசியல் அனுவபம் உள்ளவர் நாட்டுக்காக பல உன்னத சேவைகளை செய்யதவர்.

இவரை பதவியில் இருந்து விழக்கியது ஒரு கோலதளமான விடயமாகும். இந்த செயற்பாடு தற்போதை அரசாங்கத்தின் வங்குரோத்து அரசியலை சுட்டிக்காட்டுகின்றது.

இந்த அரசாங்கத்தில் இருக்ககும் அமைச்சர்களான வாசுதேவ நானயகார விமல் வீரவன்ச உதய கம்பன்வில நிமல் லன்சா போன்றவர்களும் அன்மை காலமாக அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர்.

இவர்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. மக்களுக்காக மக்கள் பிரதிநிதி என்ற வகையில் உண்மையை பேசிய முன்னால் அமைச்சர் சுசில் பிரேமசந்திர அவர்களை பதவியில் இருந்து விழக்கியுள்ளார்கள்.

இவ்வாறன சந்தர்பத்தில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் எதிர்காலத்தில் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப செயற்பட வேண்டும். இதற்கு நீங்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More