Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் புகைப்படம் எடுக்க கட்டணம்?

கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் புகைப்படம் எடுக்க கட்டணம்?

2 minutes read

கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் எடுக்கப்படும் தனிப்பட்ட செல்பி அல்லது வீடியோக்களுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என கொழும்பு துறைமுக நகரம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் புதிதாக திறக்கப்பட்ட துறைமுக நகர மெரினா உல்லாச நடைபாதையைப் பயன்படுத்த பொது மற்றும் தனியார் துறையினரிடமிருந்து முன்னெப்போதும் இல்லாத கோரிக்கைகள் வந்ததால், தனிப்பட்ட நிகழ்வுகள், தொழில்சார் மற்றும் வணிகப் படமாக்கல் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றிற்காக கட்டண அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய படமாக்கல், புகைப்படம் எடுப்பது தடையாக இருந்ததாகவும் மேலும் உலா வருபவர்களின் தனியுரிமையை மீறுவதாகவும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என கொழும்பு துறைமுக நகரம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும் அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் பொது பாதுகாப்பு மற்றும் நடந்து வரும் கட்டுமானத்தை கருத்திற்கொண்டு கொழும்பு துறைமுக நகரத்தில் இதுபோன்ற தொழில்முறை படப்பிடிப்பு அல்லது புகைப்படம் எடுப்பதில் ஈடுபட விரும்பும் எவருக்கும் பணம் செலுத்தும் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மெரினா நடைபாதை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என்றும் கட்டணப் படப்பிடிப்பையும் புகைப்படக்கலையையும் காலை 9 மணிக்கு முன்னர் அல்லது கோரப்பட்ட ஏனைய நேரங்களுக்கு முன்னர் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்திற்குள் தங்கள் தனிப்பட்ட தொலைபேசிகள் அல்லது கேமராக்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட படங்கள், வீடியோக்கள் மற்றும் செல்ஃபி எடுக்க விரும்புவோருக்கு இது பொருந்தாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் புகழ்பெற்ற சமூக அல்லது பிரதான ஊடக நிலையங்கள், சம்பந்தப்பட்ட துறைகளின் முன் அனுமதியுடன் செய்திகள் அல்லது நடப்பு விவகாரங்களை (வணிக நோக்கங்கள் அல்லாதது) படமாக்குதல், புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றை சுதந்திரமாக மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விழாக்கள், திருமணங்கள், தயாரிப்பு அல்லது பேஷன் விளம்பரங்கள், இசை வீடியோக்கள், விளம்பரங்கள் அல்லது வேறு வகையான வணிகப் படப்பிடிப்பின் படப்பிடிப்பு அல்லது புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமே கட்டணங்கள் பொருந்தும் என்றும் போர்ட் சிட்டி கொழும்பு தெரிவித்துள்ளது.

இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம், கொழும்பு துறைமுக நகரின் பொதுப் பகுதிகளை நிர்வகிக்கும் தோட்ட முகாமைத்துவ நிறுவனம் மூலம் பொது இடங்கள், கழிவறைகள் மற்றும் குப்பை அகற்றுதல் ஆகியவற்றின் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் எனவம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More