Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு!

1 minutes read

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று காலை 8.30 மணி முதல் இரவு 5.30 மணி வரையான காலப்பகுதியில் தென் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், குறித்த காலப்பகுதியில் தென் மாகாணத்தில் மாத்திரம் 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர் தரப்பரீட்சை இடம்பெறும் காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரையான காலப்பகுதியிலும் மின் மின்வெட்டை மேற்கொள்ளாதிருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதற்காக இரவு நேரத்தில் மின்வெட்டை மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்படுகிறதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இதற்கான இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More