Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகத்தில் மழை தொடரும்

நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகத்தில் மழை தொடரும்

1 minutes read

நிவர் புயல் கரையை கடந்த பின்னரும்  தமிழகம் மற்றும் புதுவையில் 27ஆம் திகதி வரை மழை தொடரும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

நிவர் புயலின் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவையில் 27ஆம் திகதி மழை வரை தொடரும். நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பாலசந்திரன் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More