சொத்துக்காக மாமனரை, மருமகன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 46வது தெருவை சேர்ந்த ஜெகநாதன். தன்னுடைய மகள் பிரேமலதா, மருமகன் குமார் மற்றும் அவர்களது 2 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.குமார், வேலைக்கு எங்கும் செல்லாமல் மனைவி பிள்ளைகளுடன் கடந்த 4 ஆண்டுகளாக மாமனார் வீட்டிலேயே இருந்து வருகிறார்.
இந்நிலையில் வேலூரில் உள்ள மாமனார் ஜெகநாதனுக்கு சொந்தமான இடத்தை தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு தகராறு செய்துவந்தார் குமார். அதற்கு மறுத்து தெரிவித்து வந்ததால்மாமனார் மருமகனுக்கு இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வழக்கம்போல் இருவருக்கும் மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குமார், வீட்டில் இருந்த கத்தியால் மாமனார் ஜெகநாதனை சரமாரியாக குத்திக் கொலை செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரேமலதா, தந்தையின் உடல் பார்த்து கதறி அழுதார்.சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி வில்லிவாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லிவாக்கம் உதவி கமிஷனர் அகஸ்டின் பால்சுதாகர், இன்ஸ்பெக்டர் ரஜீஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று கொலையான ஜெகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் மருமகன் குமாரை போலீசார் கைது செய்து அவர் மீது இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சொத்துக்காக மாமனாரை மருமகனே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் வில்லிவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.