நீலகிரி மாவட்டத்தில் கொரோனா புதிய தொற்று பாதிப்புகள் பரவதொடங்கியது.
கேரளாவில் புதிய தொற்றின் வேகம் அதிகரித்து வருவதை அடுத்து அண்டை மாவட்டமான நீலகிரியில் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என்பதை கோத்தகிரி பேரூராட்சி நிர்வாக அதிகாரி மணிகண்டன் உத்தரவின் பேரில் சுகாதார துறை அலுவலர்கள் கோத்தகிரி சுற்றுவட்டார கிராமங்களில் தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதன் விளைவாக கோத்தகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட கிராம பெண்கள் அரசு மருத்துவ மனை மற்றும் கிராம சுகாதார நிலையங்களுக்கு தாமாக முன் வந்து தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதேபோன்று, நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கீழ்கோத்தகிரி, ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளிலும் தடுப்பூசி போடுவதில் மகளிர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுவரை நீலகிரியில் 72 ஆயிரத்து 830 பேர்களுக்கும் ஊடுதலான தடுப்பூசிகள் போடபட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து A.N.கெளடர்.