செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா முதல்முறையாக ஒரு படத்திற்கு வசனம் எழுதுகிறார் கபிலன் வைரமுத்து முதல்முறையாக ஒரு படத்திற்கு வசனம் எழுதுகிறார் கபிலன் வைரமுத்து

முதல்முறையாக ஒரு படத்திற்கு வசனம் எழுதுகிறார் கபிலன் வைரமுத்து முதல்முறையாக ஒரு படத்திற்கு வசனம் எழுதுகிறார் கபிலன் வைரமுத்து

1 minutes read

பிரபல கவிஞரும், பாடலாசியரிருமான வைரமுத்துவுக்கு மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து என இரண்டு மகன்கள். இதில் மூத்தவரான மதன் கார்க்கி தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு பாடல்களும், வசனங்களும் எழுதியுள்ளார்.

இளையவரான கபிலன் வைரமுத்துவும் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். தற்போது முதல்முறையாக ஒரு படத்திற்கு வசனம் எழுதுகிறார்.

இயக்குனர் தரணியிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த ஹரிபாஸ்கர் இயக்கும் ‘மீன்’ என்ற படத்தில் இடம்பெறும் பாடல்களையும், படத்தின் வசனத்தையும் கபிலன் வைரமுத்து எழுதுகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் இயக்குனர் ஹரிபாஸ்கர், சில மாதங்களுக்கு முன் கபிலன் வைரமுத்து வரிகளில் வெளியான ‘மெய்நிகரி’ என்ற நாவலை படித்திருக்கிறார். அது பிடித்துப்போகவே அவரை இந்த படத்திற்கு வசனம் எழுத கேட்டிருக்கிறார். கதை தொடர்பான விவாதத்திற்கு பிறகு இந்த படத்திற்கு வசனம் எழுத கபிலன் வைரமுத்து ஒத்துக் கொண்டுள்ளார்.

கபிலன் வைரமுத்து ‘உதயம் என்.எச்.4’ முதல் ‘அநேகன்’ படத்தின் தலைப்பு பாடல் வரை பல்வேறு படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். தற்போது ‘பேய்கள் ஜாக்கிரதை’, ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்’ உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் எழுதிக் கொண்டிருக்கிறார்.

கலைப்புலி எஸ்.தாணுவின் மகன் கலாபிரபு இயக்கும் ‘இந்திரஜித்’ என்ற படத்தின் அனைத்து பாடல்களையும் கபிலன் வைரமுத்துவே எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More