Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நயன் – விக்னேஷ்: ஒன்றாக வாழ்பவர்கள் இணையும் படம்!

நயன் – விக்னேஷ்: ஒன்றாக வாழ்பவர்கள் இணையும் படம்!

2 minutes read

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்க விருக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை “அவள்” படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கவுள்ளார்.

“ஐயா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை  நயன்தாரா. “சந்திரமுகி” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் நயன்தாரா. இவர் அதன் பின் “கஜினி”, “பில்லா”, “யாரடி நீ மோகினி”, “தனி ஒருவன்”, “மாயா” , “நானும் ரௌடிதான்”, “அறம்”, “இமைக்கா நொடிகள்”, “கோலமாவு கோகிலா”, “விஸ்வாசம்” என்று தொடர்ச்சியாக நிறைய வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப் பட்டார்.

தற்போது இவர் தளபதி விஜய் நடிப்பில் “பிகில்” மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “தர்பார்” படத்தில் இருவருக்கும் ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நயன்தாரா. 10 வருடங்க்கலுக்கும் மேலாக முன்னணி ஹிரோயினாக கோலோச்சி வருகிறார். தனக்கென தனி ரசிகர் பட்டாளம் பெற்று லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். தனி ஹிரோயினாக படங்களில் கலக்கி வரும் இவர், ஹிரோவுக்கு இணையான வெற்றிகளை பெற்று வருகிறார். இவருடைய அடுத்து ஒரு திரில்லர் படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் கசிந்துள்ளது.

“அவள்” படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ். தற்போது நயன்தாரா படத்தை இயக்கப் போவதாக சொல்லப் படுகிறது. இப்படத்தில் நயன்தராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார்.

நயந்தாரா

மிலிந்த் ராவ் 7 வருடமாக இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு “காதல் டூ கல்யாணம்” என்ற படத்தை இயக்கினார். 2010ல் எடுத்து முடிக்கப் பட்ட இத்திரைப்படம் இன்றுவரை ரிலீசாகாமல் உள்ளது. அதன் பிறகு சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகிய “அவள்” என்னும் திகில் திரைப்படத்தை இயக்கினார் மிலிந்த் ராவ். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி ரசிகர்களிடம் அமோக ஆதரவு பெற்றது.

இந்த நிலையில் மிலிந்த் ராவ் தற்போது நயன்தாராவை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்கப் போகிறார். நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இப்படத்தை தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளன. செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இப்படத்தின் மூலம் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணையப் போகிறார்கள். பெயரிடப் படாத இப்படத்தைப் பற்றிய அதிகாரப் பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More