பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்கள் தான் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி.
இந்த முக்கிய தொடர்களை இயக்கி வந்தவர் தான் பிரவீன் பேண்ட், இவர் பிரபல சீரியல் நடிகையான சாய் ப்ரமோதிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
சாய் ப்ரமோதிதா காண காணும் காலங்கள், ஜோடி நோ.1 உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார்.
இந்நிலையில் பிரவீன் பேண்ட் அவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது மகனின் புகைப்படத்தை முதல்முறையாக பதிவிட்டுள்ளார். தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ள அந்த புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.