Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சேரனின் ‘ஆட்டோகிராப்’ திரைப்பட பாடகர் கொரோனாத் தொற்றால் மரணம்

சேரனின் ‘ஆட்டோகிராப்’ திரைப்பட பாடகர் கொரோனாத் தொற்றால் மரணம்

1 minutes read

சேரனின் நடிப்பில் வெளியான ‘ஆட்டோகிராப்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே..’ என்ற பாடலில் தோன்றிய பாடகர் கோமகன் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இசை அமைப்பாளர் பரத்வாஜ் இசையில் பாடலாசிரியர் பா விஜய் தன்னம்பிக்கையூட்டும் பாடல் வரிகளில் உருவான ‘ஒவ்வொரு பூக்களுமே..’ என தொடங்கும் பாடல் இன்றுவரை திரையிசை ரசிகர்களிடையே பிரபலம் வாய்ந்தது.

 இந்த பாடலில் நடிகை சினேகாவுடன் பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளி பாடகரான கோமகன் தோன்றுவார். இவர் அண்மையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இவர் பாடகராக அறியப்படுவதுடன், 2008ஆம்  ஆண்டில் தி.மு.க அரசால் அமைக்கப்பட்ட தமிழக அரசின் மாற்று திறனாளிகள் நல வாரியத்தின் நிர்வாக உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருது பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் புகழ் கோமகன் கொரோனாவால்  உயிரிழப்பு.! - TamilSpark

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More