Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் கொரோனா விதிமுறையை மீறியதாக நடிகர் கமல் மீது குற்றச்சாட்டு

கொரோனா விதிமுறையை மீறியதாக நடிகர் கமல் மீது குற்றச்சாட்டு

1 minutes read

கொரோனா விதிமுறையை மீறி பிக் பொஸ் நிகழ்ச்சிக்கு சென்றதாக நடிகர் கமல்ஹாசன் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டிற்கு விளக்கம் கேட்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிக் பொஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசனாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 

இந்நிலையில், அண்மையில் வெளிநாடு சென்று திரும்பிய அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு நவ. 22ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில், வீடு திரும்பி 7 நாட்கள் முடிவடைவதற்குள் கடந்த சனிக்கிழமை நடந்த பிக்பொஸ் நிகழ்ச்சியின் படப் பிடிப்பில் கலந்து கொண்டதாக கமல் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவத்துறை செயலாளரிடம் திங்கள்கிழமை கூறுகையில், கொரோனா விதிமுறையை மீறியது தொடர்பாக நடிகர் கமல்ஹாசனிடம் அரசுத் தரப்பில் விளக்கம் கேட்கப்படும் என்றார்.

கொரோனா விதிமுறைகளின்படி, நோய்த் தொற்றிலிருந்து வீடு திரும்பிய பிறகு 7 நாட்கள் கட்டாய வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More