Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மூன்று நாயகிகளுடன் இணையும் நடிகர் கதிர்

மூன்று நாயகிகளுடன் இணையும் நடிகர் கதிர்

1 minutes read

‘பரியேறும் பெருமாள்’, ‘சர்பத்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் கதிர் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில், மூன்று நாயகிகள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குனர் ஜேக் ஹாரிஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிகர் கதிர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் அவருடன் நடிகை நடிகைகள் ஆனந்தி, ஆத்மியா, பவித்ர லட்சுமி ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் நரேன், நட்டி என்கிற நட்ராஜ், ஜோன் விஜய், நடிகை வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்திற்கு மலையாள இசை அமைப்பாளர் ரஞ்ஜின் ராஜ் இசை அமைக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில், ‘படத்தின் நாயகனான கதிர், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். நடிகர் நரேன் உளவுத்துறையில் பணியாற்றும் அதிகாரியாகவும், நட்டி என்கிற நட்ராஜ் கேங்ஸ்டர் தலைவனாகவும் நடிக்கிறார்கள். 

ஒரு குற்ற சம்பவத்தின் பின்னணியில் நடைபெறும் இந்த புலனாய்வு மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் நடிகை ஆத்மியா உளவு பார்க்கும் பெண்ணாக படம் முழுவதும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிகை பவித்ர லக்ஷ்மி நாயகன் கதிருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படத்தில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு நடிகையான ஆனந்தியின் கதாபாத்திரம் சுவையானது. எதிர்பாராத திருப்பம் கொண்டது ‘ என்றார்.

தமிழ் மற்றும் மலையாள மொழியில் ஒரே சமயத்தில் தயாராகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More