தேவையான பொருட்கள்:-
கடலைப் பருப்பு – 50 கிராம்,
காய்ந்த மிளகாய் – 8 முதல் 10,
பெருங்காயம் – சிறு துண்டு,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,
தேங்காய்த் துருவல் – கால் மூடி,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் – அரை டீஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்றாகச் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள்.
ஆறியதும் அவற்றுடன் புளியையும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு அரைத்தெடுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளபொருட்களை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் போட்டு கலந்து பரிமாறவும்.
இதைத் துவையல் போல கெட்டியாகவும் வைத்துக்கொள்ளலாம் அல்லது சிறிது நீர் சேர்த்து சட்னியாகவும் சாப்பிடலாம்.
உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.