என்னென்ன தேவை?
பழுத்த பெங்களூர் தக்காளி – 5,
பெரிய வெங்காயம் – 1,
பச்சைமிளகாய் – 2-3,
அரிசி – 250 கிராம்,
குடைமிளகாய் – 50 கிராம்,
காலிஃப்ளவர் – 100 கிராம்,
ஃப்ரெஷ் பட்டாணி – 50 கிராம்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
முழு பட்டை,
கிராம்பு – சிறிது.
எப்படிச் செய்வது?
வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், காலிஃப்ளவரை நறுக்கிக் கொள்ளவும். கழுவி சுத்தம் செய்த அரிசியை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பட்டை, கிராம்பு தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும். பின்பு வெங்காயத்தை வதக்கி, குடைமிளகாய், காலிஃப்ளவர், பட்டாணியைச் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கி, ஊறவைத்த அரிசியைச் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து அதில் 50 மி.லி. தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து குக்கருக்கு மாற்றி 2 விசில் விட்டு அரிசி வெந்ததும் இறக்கவும். தயிர் பச்சடி, வெஜ் குருமாவுடன் பரிமாறவும்.
குறிப்பு: புலாவ் செய்யும் போது அரிசி குழையாமல் வேகவைக்க தண்ணீர் (அரிசி: தண்ணீர்) 1:1½ அளவு, ஊறிய அரிசிக்கு 1:1 ஆகவும், காய்கள் சேர்த்தால் 1:2
இருக்க வேண்டும்.
நன்றி : தினகரன்