தேவையானவை:
பச்சரிசி – ஒரு கப்,
மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – கால் கப்,
கடுகு – கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசியுடன் மிளகு, சீரகம் சேர்த்து ரவை போல பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் தேங்காய் துருவலை சேர்க்கவும்.
அதனை லேசாக வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்க்கவும். அது கொதிக்க ஆரம்பிக்கும்போது பொடித்த ரவையை மெதுவாகப் போட்டுக் கிளறி, கெட்டியாக வரும்போது இறக்கவும்.
ஆறியதும், சிறுசிறு அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
நன்றி-தினகரன்