Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் மார்பக புற்று நோய் | யாரை எல்லாம் தாக்கலாம் | சில தகவல்கள் மார்பக புற்று நோய் | யாரை எல்லாம் தாக்கலாம் | சில தகவல்கள்

மார்பக புற்று நோய் | யாரை எல்லாம் தாக்கலாம் | சில தகவல்கள் மார்பக புற்று நோய் | யாரை எல்லாம் தாக்கலாம் | சில தகவல்கள்

1 minutes read

* 40 வயதை கடக்கும் பெண்களை தாக்கலாம்.

* ரத்தபந்தம் கொண்ட யாருக்கேனும் மார்பகம்– சினைப்பை– பெருங்குடல் புற்றுநோய் ஏதாவது இருந்திருந்தால், பாரம்பரிய அடிப்படையில் அடுத்த தலைமுறையையும் பாதிக்கலாம்.

* 35 வயதுக்கு மேலும் கர்ப்பம் தரிக்காதவர்கள்

* குழந்தைப் பேறு இல்லாதவர்கள்

* தாய்ப்பால் புகட்டாதவர்கள்

* 11 வயதுக்கு முன்பே வயதுக்கு வந்தவர்கள்

* 55 வயதுக்கு மேலும் மாதவிலக்கு ஏற்படுகிறவர்கள்

* கருப்பையை நீக்கியவர்கள்

* மருந்து, மாத்திரை மூலமாக ஹார்மோன் எடுத்துக்கொண்டவர்கள்

* உடல் குண்டானவர்கள்..

ஆகியோர்களை மார்பக புற்றுநோய் தாக்கலாம்!

***

அறிகுறிகள்:

* மார்பகத்தில் காணப்படும் கட்டி.

* மார்பக காம்புகளில் இருந்து திரவம் வெளியேறுதல். (தாய்ப்பால் புகட்டும் காலத்தில் பால் வெளியேறலாம். வேறு எப்போதும், எந்த திரவமும் மார்பக காம்புகளில் இருந்து வெளியேறக்கூடாது. வெளியேறினால் உடனடியாக கவனிக்கவேண்டும்)

* மார்பக காம்புகள் உள்அமுங்கிப்போகுதல்.

* காம்புகளை சுற்றி தடித்துப்போகுதல்.

* மார்பகங்கள் இரண்டிலும் ஒன்றுக்கொன்று அளவில் வித்தியாசம் காணுதல்.

* மார்பகத்தில் குழிவிழுதல்.

* மார்பக சருமத்தில் மாற்றம் ஏற்படுதல்.

* மார்பகத்தில் வலி தோன்றுதல்.

* அக்குளில் கட்டி ஏற்படுதல் மற்றும் அக்குளில் நெரி கட்டுதல்.

* இதயப் பகுதியில் ஏற்படும் அசவுகரியமான வலி.

மேற்கண்ட அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டாலே உஷாராகி விடவேண்டும். ஆனால் அதை மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வேறுவிதமான பாதிப்புகளாலும் இந்த அறிகுறிகள் தென்படலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More