செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் மார்பக புற்று நோய் | யாரை எல்லாம் தாக்கலாம் | சில தகவல்கள் மார்பக புற்று நோய் | யாரை எல்லாம் தாக்கலாம் | சில தகவல்கள்

மார்பக புற்று நோய் | யாரை எல்லாம் தாக்கலாம் | சில தகவல்கள் மார்பக புற்று நோய் | யாரை எல்லாம் தாக்கலாம் | சில தகவல்கள்

1 minutes read

* 40 வயதை கடக்கும் பெண்களை தாக்கலாம்.

* ரத்தபந்தம் கொண்ட யாருக்கேனும் மார்பகம்– சினைப்பை– பெருங்குடல் புற்றுநோய் ஏதாவது இருந்திருந்தால், பாரம்பரிய அடிப்படையில் அடுத்த தலைமுறையையும் பாதிக்கலாம்.

* 35 வயதுக்கு மேலும் கர்ப்பம் தரிக்காதவர்கள்

* குழந்தைப் பேறு இல்லாதவர்கள்

* தாய்ப்பால் புகட்டாதவர்கள்

* 11 வயதுக்கு முன்பே வயதுக்கு வந்தவர்கள்

* 55 வயதுக்கு மேலும் மாதவிலக்கு ஏற்படுகிறவர்கள்

* கருப்பையை நீக்கியவர்கள்

* மருந்து, மாத்திரை மூலமாக ஹார்மோன் எடுத்துக்கொண்டவர்கள்

* உடல் குண்டானவர்கள்..

ஆகியோர்களை மார்பக புற்றுநோய் தாக்கலாம்!

***

அறிகுறிகள்:

* மார்பகத்தில் காணப்படும் கட்டி.

* மார்பக காம்புகளில் இருந்து திரவம் வெளியேறுதல். (தாய்ப்பால் புகட்டும் காலத்தில் பால் வெளியேறலாம். வேறு எப்போதும், எந்த திரவமும் மார்பக காம்புகளில் இருந்து வெளியேறக்கூடாது. வெளியேறினால் உடனடியாக கவனிக்கவேண்டும்)

* மார்பக காம்புகள் உள்அமுங்கிப்போகுதல்.

* காம்புகளை சுற்றி தடித்துப்போகுதல்.

* மார்பகங்கள் இரண்டிலும் ஒன்றுக்கொன்று அளவில் வித்தியாசம் காணுதல்.

* மார்பகத்தில் குழிவிழுதல்.

* மார்பக சருமத்தில் மாற்றம் ஏற்படுதல்.

* மார்பகத்தில் வலி தோன்றுதல்.

* அக்குளில் கட்டி ஏற்படுதல் மற்றும் அக்குளில் நெரி கட்டுதல்.

* இதயப் பகுதியில் ஏற்படும் அசவுகரியமான வலி.

மேற்கண்ட அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டாலே உஷாராகி விடவேண்டும். ஆனால் அதை மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வேறுவிதமான பாதிப்புகளாலும் இந்த அறிகுறிகள் தென்படலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More