Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் மகளிருக்கான அற்புத டிப்ஸ் டிப்ஸ் .

மகளிருக்கான அற்புத டிப்ஸ் டிப்ஸ் .

1 minutes read

அலுமாரிகளில் கற்பூரத்தை வைத்து பூச்சிகள் வராமல் துணிகளையும், புத்தகங்களையும் பாதுகாக்கலாம். இதை வாஷ் பேசின்களிலும் போட்டு வைக்கலாம். துர்நாற்றம் வீசாது.

பிரைட் ரைஸ் போன்ற அரிசி வகை உணவுகளை சமைக்கும்போது சில துளிகள் எண்ணெய் அல்லது எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சாதம் ஒட்டாமல் மிருதுவாக வரும்.

துணியில் ஏதேனும் டீ, காபி கரைகள் இருந்தால் வெந்நீரில் ஊறவைத்து துணிகளை துவைத்தால் அதில் இருக்கும் கரை நீங்கும்.

வறுத்த வேர்க்கடலையை பொடியாக்கி பொரியல் கூட்டு சமைக்கும்போது அத்துடன் சேர்க்கலாம். இது சுவையை கூட்டும்.

இட்லி மாவு புளிக்காமல் இருக்க ஒரு சிறய துண்டு அரிசியை அதில் போட்டு வைத்தால் புளிக்காது.

கோழிக்கறி மிருதுவாக இருக்க சமைக்கும்போது 1/2 கிலோவிற்கு ஒரு முட்டை என்ற விகிதத்தில் முட்டையைச் சேர்த்துக் கொண்டால் கறி மிருதுவாக இருக்கும்.

பொரியல் செய்யும்போது அடிக்கடி தண்ணீர் தெளித்தால் அது பாத்திரத்தில் ஒட்டாமல் உதிரியாக இருக்கும்.

வீட்டில் உள்ள எலக்ட்ரிக் ஸ்விட்ச்களில் அழுக்கு சேர்ந்து விட்டால் அதை எளிதில் அகற்றவேண்டும் என்றால் நெயில் பாலிஷ் ரிமூவரை அதன் மேல் தடவி துடைத்தால் சுவிட்ச் அழுக்கில்லாமல் பளபளப்பாக இருக்கும்.

காய்கறிகளை சமைக்கும்போது பாத்திரத்தை மூடி வைத்து சமைத்தால் சமையலும் சீக்கிரம் முடியும் அதில் இருக்கும் சத்துக்களும் வெளியில் போகாமல் இருக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More