உலகையே உலுக்கி எடுக்கின்ற கொவிட் தாக்கத்தால் பயணக்கட்டுப்பாட்டிலே நாடே வெறுச்சோடுகிறது.
மூன்று கிழமைக்கு பிறகு திறக்கின்ற போது ஒரு பெரிய சாப்பாட்டு கடையிலே ஒரு முதியவர் ஒட்டி உலர்ந்த வயிற்றுடன் கந்தலனிந்த ஆடையிலே வந்து கடைக்கார முதலாளியிடம் வந்து “தம்பி நான் சாப்பிட்டு மூன்று நாட்களாகின்றது. ஏதாவது இருந்தால் உண்பதற்கு தருவியா…” என்று தயங்கித் தயங்கி கேட்டார்.
அவர் முகத்தில் நெடுநாள் பசிக்களை.
அந்த முதலாளி ஏளனத்துடன் பார்த்து அவரை வயது முதிர்ந்த ஒரு ஏழை என்று பார்க்காமல் “பிச்சைக்கார நாயே… விடியக் காலமை வந்து என்ரை வியாபாரத்தை கெடுக்கப் போறியே…” எனப் பாய்ந்தடித்துப் பேசினான்.
பிச்சைக்காரன் எதுவும் பறையாமல் நடந்தார்.
அன்றைக்கு வியாபாரம் நன்றாகவே நடந்தது. முதலாளி பணத்தை எண்ணி தனது பையில் வைத்துக் கொண்டு வங்கிக்குச் சென்றான். வங்கியில் சென்று பையைப் பார்த்தால் பணத்தைக் காணவில்லை. முதலாளி பதறிப் போனான். திரும்ப வழிநெடுக வந்து பார்த்தான். பணப்பை இல்லை.
இரவானதும் மிஞ்சிய சாப்பாட்டை ஒரு கிடங்கில் வெட்டி தாழ்த்தான்.
காலையில் வந்த அதே பிச்சைக்கார ஐயா. வாசலில் வந்து நிற்கவும் அந்த முதலாளி முகத்தில் மீண்டும் கிண்டல்.
“இப்ப தான் மிஞ்சிய சாப்பாட்டை குப்பையில போட்டு தாட்டேன்… முதல் வந்து இருந்தாய் என்றால் தாட்ட அனைத்தையும் உண்டு இருக்கலாம்… என்றான்.
அதற்கு முதியவர் தம்பி உனது பணப்பை கிழே விழுத்தி விட்டாய்.. ஒருதொகைபணமும் விழுந்து கிடந்த உன்னுடைய அடையாள அட்டையும் இது தானே.. அதுதான் நான் உன்னிடம் கொடுக்க வந்தேன்..” என கூறினார்.
பொருட்களை ஒப்படைத்து “நீ தவறவிடப்பட்ட அனைத்தும் சரியா என்று பாரப்பா..” என கூறி முதியவர் அவ்விடத்தை விட்டு சென்றார்.
அந்த முதலாளி வெட்கி தலைகுனிந்து கண்கலங்குகிறார்.
“நான் எவ்வளவு தரக் குறைவாய் நடந்தேன்…” முதலாளிக்கு பெருத்த அவமானமாகத் தோன்றியது.
சுதாகரன் கோகுலன்