Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் பாலு மகேந்திரா நூலகத்தின் சிறுகதை போட்டி | ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை

பாலு மகேந்திரா நூலகத்தின் சிறுகதை போட்டி | ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை

2 minutes read

பாலு மகேந்திரா நூலகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, வளர்ந்துவரும் ஈழத்து எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, சென்ற ஆண்டு போல இம்முறையும் சிறுகதைப் போட்டி ஒன்றினை நடாத்த முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் விதிகளுக்கு உட்பட்டு போட்டியாளர்கள் சுயவிபரக்கோவை மற்றும் சிறுகதைகளை கீழ் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரம் வருமாறு:

சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி: balumahendralibrary.org@gmail.com

போட்டி விதிமுறைகள்:
🔸ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.

🔸ஒருவர் எத்தனை சிறுகதைகளையும் அனுப்பிவைக்கலாம்.

🔸சிறுகதைகள் உங்கள் சொந்த ஆக்கமாகவும், வேறு கதைகளைத் தழுவியதாகவும் இல்லாதிருத்தல் வேண்டும்.

🔸சிறுகதைகள் முன்னர் வேறு எங்கும் வெளிவராததாக இருத்தல் வேண்டும்.

🔸சிறுகதைகளை யுனிகோட் (Unicode) முறையில் தட்டச்சு செய்யப்பட்டு, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

🔸சிறுகதைகள் 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.

🔸சிறுகதைகள் 2022 ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

போட்டி தொடர்பான விபரங்கள்:
🔸எமது தெரிவுக்குழுவினரால் சிறந்த 20 சிறுகதைகள் தெரிவுசெய்யப்பட்டு, அவை மூன்று பேர்கொண்ட நடுவர்களிடம் தனித்தனியாகக் கையளிக்கப்படும்.

🔸நடுவர்களின் வரிசைப்படுத்தலின் அடிப்படையில் இறுதி முடிவு அறிவிக்கப்படும். இதில் நடுவர்களின் முடிவே இறுதியானது.

🔸நடுவர்களின் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

🔸வெற்றிபெறும் சிறுகதைகள் தொகுப்பாக வெளியிடப்படும்.

🔸சிறுகதை உரிமம் என்றும் எழுத்தாளருடையது.

🔸முடிவுகள் அறிவிக்கப்படும் நிகழ்வில், படைப்பாளர்களின் சிறுகதைகள் தொடர்பிலான பின்னூட்டங்கள் குறித்து நடுவர்களுடனான கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

🔸முதலாம் பரிசு: 25 000 ரூபா
🔸இரண்டாம் பரிசு: 15 000 ரூபா
🔸மூன்றாம் பரிசு: 10 000 ரூபா
🔸10 ஆறுதல் பரிசுகள்: ஒவ்வொரு சிறுகதைக்கும் தலா 5 000 ரூபா

இச்சிறுகதைப் போட்டியினை இணைந்து நடாத்துவோர் “எங்கட புத்தகங்கள்” மற்றும் “பட்டறை”.

அனைத்துப் பங்குபற்றாளர்களுக்கும் எமது முற்கூட்டிய வாழ்த்துக்கள்.

இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
15.06.2022

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More