செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் நூறாவது முறையாய்.. | கவிதை | மனுநீதிநூறாவது முறையாய்.. | கவிதை | மனுநீதி

நூறாவது முறையாய்.. | கவிதை | மனுநீதிநூறாவது முறையாய்.. | கவிதை | மனுநீதி

1 minutes read

நான் விழித்ததும்

நீ காபிகொண்டு

வரும்போது உன்னை

இருக்க கட்டி கொண்டு

அந்த சப்தமில்லாத

முத்தம் உன் சிணுங்கல் !!

 

தலை துவட்ட

நான்

துண்டு கேட்கும் போது

மறுபடியும்

நாம் குளித்த நாட்கள் !!

 

பணிக்கு செல்ல

மனமில்லாமல்

நிற்கும் எனக்கு

நீ முத்தம்

தந்து வழி

அனுப்பும்

அந்த நேரம் !!

 

மனம் வீட்டிலும்

உடல் பணியிலும்

மாலைக்காக

நான் ஏங்கும்

அந்த பணியிட நாட்கள் !!

 

இத்தனை அழகா

என நான் தினமும்

வியக்க என்னை

வரவேற்கும்

உன் புன்சிரிப்பு !!

 

உன் முகம் என்ன

மாயகண்ணாடியா

பார்த்தவுடன் என்

கவலைகள்

மறைந்து போகின்றன !!

 

நம் ஊடலுக்கு

சான்றாக நம்

குட்டி தேவதை

ஆம்…

உன்னை விட அழகாய்!!

 

நான் உனக்காகவும்

நீ எனக்காகவும்

விட்டு கொடுத்து

வாழ்ந்த அந்த வாழ்க்கை !!

 

ஒவ்வொரு நாட்களும் தேன் !

 

சூரிய ஒளி

கண்ணில் பட விழித்தேன் !

 

இந்த கனவு நினைவாக

இன்றாவது காதலை

சொல்லி விட வேண்டும் !!

 

தைரியமின்றி

சபதமெடுத்தேன்

நூறாவது முறையாய் !

 

 

 

நன்றி : மனுநீதி | தமிழ் இலக்கியம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More