Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் சோழ வழிமீது சத்தியம் ஈழ வலி மீது சத்தியம்! கவிதை

சோழ வழிமீது சத்தியம் ஈழ வலி மீது சத்தியம்! கவிதை

2 minutes read
துரோக ஆற்றாமையில்
தீ நாறாய்ப் போகிறது
சோழ காதை
ஆனாலுமென்ன
புலிக்கொடிதாங்கிய
தஞ்சைப் பெருங்கோயிலான்
சாய்ந்திடுவதில்லை
சரிந்தும் எரிந்திடுவதில்லை
ஆழக்கடலெங்கும் சோழமகராசன்
ஆட்சி புரிந்தானென
பாடினான் பாவலன்அன்று
வன்னிக்கடலெங்கும்
முப்படை நீட்டி
விடுதலை பாடினான் கரிகாலனின்று
டில்லிமீதிலோர் காதலால்
தவளைகள் பிதற்றலைக் கண்டீர்
அவர் யார் சனித்த மகவோ
மாமன்னர் இழிதலைக் கண்டீர்
ஆன்றறிந்து பகர்கிறேன்
கடல் கடந்த சோழன் வீழ்வதில்லையென்பதை
வங்கங் கடந்தவன்
சிங்கப்பூர் மலேசியா ஈழம்
யாவும் ஒளிர்ந்திடல் செய்தான்
தாய் சேய் நீதியை
பசுவிலே வரைந்தான்
திருமுறைகள் கொய்து
தமிழினை யாத்தான்
மனுநீதி குலோத்துங்கன் கரிகாலனாகி
புகழினைச் சூடினான்
ராஜ ராஜ சோழன்
புல்லர்கள் வசையினில்
வதைவாதுமில்லை எங்கள்
புகழ்மிக்க சோழனாய் வரலாறு பாடும்
அவன் வசைபாடல் நிகழின்
இனி நெருப்பாறே ஓடும்
இது சோழ வழிமீது சத்தியம்
ஈழ வலி மீது சத்தியம்
0
த. செல்வா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More