Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் உனக்காகவே நான் வாழ்கின்றேன் | காவியா

உனக்காகவே நான் வாழ்கின்றேன் | காவியா

2 minutes read
 
என் மனம் இரு கூறாய்
அங்கே நீ ஆணி வேராய்
இறுக்கி பிடிக்கிறாய்
உன்னை விட்டு
போகுமா என் மனம்
சாகுமா என் கர்வம்?
 
ஆயிரம் சோகங்கள்
ஆயிரம் தாபங்கள்
எனக்குள் இருப்பினும்
உன்னை நோக்கியே
நடக்குதே என் பாதம்
அழிந்தே போகுதே
என் கோபம்
 
கண்ணீர் துளியிலே
தெரியுமே உன் குணம்
உன்னை அணைக்கவே
விரையுமே என் கரம்
இணைந்திருக்கும் என்புயம்
மலர்ந்திருக்கும் நின்முகம்
 
சோகங்கள் வேண்டாமே
கண்ணீரும் வேண்டாமே
காலங்கள் உருண்டோட
என் காதல் கரை ஏறுமே
உன் மடியில் உறவாடுமே
ஒரு நொடியில் கரைதோடுமே
 
உனக்காக மட்டுமே
என் பெண்மை மலருமே
உன் தோளில் மாலையாவே
இப் பூவும் பூத்ததே
மாறி பூ பறிக்கப்பட்டால்
தான் மரித்தே போகுமே
 
காவியா
01/08/19
 
 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More