0
என் மனம் இரு கூறாய்
அங்கே நீ ஆணி வேராய்
இறுக்கி பிடிக்கிறாய்
உன்னை விட்டு
போகுமா என் மனம்
சாகுமா என் கர்வம்?
ஆயிரம் சோகங்கள்
ஆயிரம் தாபங்கள்
எனக்குள் இருப்பினும்
உன்னை நோக்கியே
நடக்குதே என் பாதம்
அழிந்தே போகுதே
என் கோபம்
கண்ணீர் துளியிலே
தெரியுமே உன் குணம்
உன்னை அணைக்கவே
விரையுமே என் கரம்
இணைந்திருக்கும் என்புயம்
மலர்ந்திருக்கும் நின்முகம்
சோகங்கள் வேண்டாமே
கண்ணீரும் வேண்டாமே
காலங்கள் உருண்டோட
என் காதல் கரை ஏறுமே
உன் மடியில் உறவாடுமே
ஒரு நொடியில் கரைதோடுமே
உனக்காக மட்டுமே
என் பெண்மை மலருமே
உன் தோளில் மாலையாவே
இப் பூவும் பூத்ததே
மாறி பூ பறிக்கப்பட்டால்
தான் மரித்தே போகுமே
காவியா
01/08/19