Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கவிதை | நதி ஒன்று துயில்கிறது | பா .உதயன்

கவிதை | நதி ஒன்று துயில்கிறது | பா .உதயன்

0 minutes read

அமைதியாய் துயிலும்
நதியும் அழகே
அதன் அருகினில்
பாடும் மலையும் அழகே

காலையும் அழகே
மாலையும் அழகே
காலங்கள் சொல்லும்
இயற்கையும் அழகே

பறவைகள் பாடும்
மொழியும் அழகே
கடல் அலை பாடும்
கவியும் அழகே

காலையில் பூத்திடும்
பூக்களும் அழகே
அந்த பூவினில் தெரியும்
புன்னகை அழகே

சிட்டு குருவியின்
சிரிப்பு ஒலி போலே
சிரித்திடும் குழந்தையின்
சிரிப்பொலி அழகு

அந்தியில் பூத்த
வானமும் அழகே
அதன் அருகினில் தெரியும்
நிலவும் அழகே

கூவிடும் குயிலின்
குரலிசை போலே
அழகிய மொழியாம்
தமிழ் இசை அழகே .

அழகிய கிளிகள்
பறப்பதும் போலே
அம்மாவின் அன்பும்
அதுபோல் அழகு

அழகிய சுரமாய்
உயிர்த்திடும் சிலையின்
சிற்பியின் உளியின்
ஓசையும் அழகே

அத்தனை இருப்பும்
ஆழ்ந்த பொருளே
அமைதியாய் துயிலும்
அந்த நதியினை போலே.

-பா. உதயன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More