அபிநயசேஸ்த்திரா ஆடற் கலை அமைப்பும் யோர்க் பல்கலைக்கழக நேத்திரவும் இணைந்து ஏற்பாடு செய்த ஈழ நாட்டியப் பயிலரங்கு. மே மாதம் 22,23 ஆம் திகதிகளில் மிகச் சிறப்பாக நடை பெற்றது. அபிநயசேஸ்திரா கார்த்திகா மிகச் சிறந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ஆர்வத்துடன் பலரும் கலந்து கொண்டனர்.
பிரான்ஸ், நோர்வே, பிரித்தானியா என ஐரோப்பிய நாடுகளில் கால் கொண்ட நம் ஈழ நாட்டியம் கண்டங்கள் கடந்து உலகம் முழுவதும் கிளை விட்டு கிளர்ந்தெழும் காலமிது. கல்விப் புலத்திலும் கலைப் புலத்திலும் கவினுறு கலையாய் நம் ஆடலாய் அடுத்த சந்ததியினரின் கரங்களில். நமக்கான நடன வடிவமாய் உலகப் பரப்பில் உயிர் கொண்டு எழுகிறது ஈழ நாட்டியம் என தெரிவித்தார் பேராசிரியர் பால சுகுமார். கடந்த சில மாதங்களாக பல்வேறு நாடுகளில் ஈழநாட்டியம் பற்றிய பயிலரங்குகளையும் அரங்காடல்களையும் நிகழ்த்திவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.